states

img

ஜார்கண்ட் மாநிலத்தில் எருமை மாட்டிற்காக 16 வயது சிறுவனை கொன்ற கொடூரம்!

ஜார்கண்டின் தாதி கிராமத்தில் 16 வயது சிறுவனின் இருசக்கர வாகனம் எருமை மாட்டின் மீது மோதியதால் அச்சிறுவன் அடித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டம் தாதி கிராமத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் கால்பந்து போட்டியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது, அச்சிறுவன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் சாலையில் திரிந்த எருமை மீது மோதியது.

 வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் எருமையின் உரிமையாளரிடம் இழப்பீடு தருவதாக சிறுவன் தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரை நான்கு பேர் கொடூரமாகத் தாக்கத் தொடங்கியதும் அச்சிறுவனின் நண்பர்கள் தாக்குதலுக்குப் பயந்து தப்பி ஓடினர்.

தொடர்ந்து தாக்கப்பட்ட அச்சிறுவன் பலத்த காயமடைந்ததால் சமூக நல மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூர் மக்கள், சிறுவனைத் தாக்கி கொலை செய்தவர்களைக் கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளிகளை இரண்டு நாட்களில் கைது செய்வதாக போலீஸ் கூறியதால் மக்கள் மறியலைக் கைவிட்டனர்.